வியாழன், 12 பிப்ரவரி, 2009

ஒரு சில நிமிடம்.....!!!!

வணக்கம் உறவுகளே...!!!!

ஒரு முக்கியமான கால கட்டத்தில் வரலாற்று கடமையை செய்ய வேண்டிய தருணத்தில் நிற்கிறோம்.
புலம்பெயர் தமிழர்களின் கைகளில் முக்கியமான பணி ஒன்று தமிழீழ தாயகத்தில் வாழும் எங்கள் உறவுகளால் தரப்பட்டிருக்கிறது.

இன்று ஒரு பலஸ்தீனியன் செய்யாத புரட்சியை,இஸ்ரேலியன் செய்திராத சர்வதேச பரப்புரையை,ஒரு காசா நாட்டுக்காரன் கண்டிராத இழப்பை எல்லாம் ஈழத்தமிழன் நிலத்திலும் புலத்திலும் அனுபவித்தும் செய்தும் காட்டியாகிவிட்டது.கடந்த 3வாரமாக சர்வதேச அளவில் வரலாற்றில் எந்த ஒரு இனமும் செய்திராத மக்கள் புரட்சியை புலம்பெயர் தமிழர்கள் நிகழ்த்தி சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டியிருக்கிறார்கள்.இதற்குமேல் சர்வதேச அளவில் கவனயீர்ப்பையோ பரப்புரையையோ செய்யமுடியாது என்பதுசர்வதேச மனித நேய கனவான்களுக்கு தெரிந்த உண்மை.

கொழுத்தும் வெய்யிலில் தீக்குளித்தார்கள் மெல்பேர்ன் நகரில் 5000 தமிழர்கள்.பட்டிணியிருந்து உடல் வருத்தி கருணை காட்டுங்கள் என இளையோர் மன்றாடிக்கேட்டார்கள் சிட்னியில்.கன்பராவில் 4000 தமிழர்கள் என்றுமில்லாதவாறு அவுஸ்ரேலிய அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தார்கள்.ஆனாலும் என்ன பயன்?என்ன நடந்தது?ஒன்றுமேயில்லை.வெறும் காகிதத்தில் உப்புச்சப்பில்லாத பதில் அறிக்கைகள்.அதுகூட சிறிலங்கா அரசாங்கத்தின் மனம் நோகக்கூடாது என்று கஸ்ரப்பட்டு தயாரிக்கப்பட்டவை என்பது எல்லோரும் அறிந்த கசப்பான உண்மை.ஆனால் கண்துடைப்புக்காக சில தாமதமான வாக்குறுதிகள் வழங்பட்டது ஏனோ மனதுக்கு ஆறுதல்.அவைகூட கானல் நீர்தான்.

வாழ்க்கை தேடி வந்த நாட்டையும் மக்களையும் குறை சொல்வதாய் சிலர் முணுமுணுப்பது என் காதுகளுக்கு கேட்கிறது.அடைக்கலம் தந்த நாட்டை ஆலயங்காளாக நினைக்கும் ஆயிரம் ஆயிரம் தமிழர்களில் நானும் ஒருவன்.நாயிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட இந்த அகதிகளுக்கு கொடுக்கிறார்கள் இல்லையே என்று நினைக்கும் போதுதான் மனதின் ஒரு ஓரத்தில் வலிக்கிறது.

உங்கள் மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் இதை ஒரு சீனாக்காரனோ இல்லை அவுஸ்ரேலிய பழங்குடியினரோ செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்?அவுஸ்ரேலிய குடியுரிமை உடைய அவுஸ்ரேலிய இளையோர் 4 பேர் உண்ணாவிரத போராட்டம் என்று ஒரு 5 நிமிடத்துக்கு இருந்தால் என்ன ஆகியிருக்கும்?அதுவே இந்த நாட்டின் முக்கிய பிரச்சினையாக அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாகியிருக்கும்.நாடே திரும்பிப்பார்த்து கேள்வி கேட்டிருக்குமா? இல்லையா?ஆனால் அவுஸ்ரேலிய மண்ணின் குடியுரிமை பெற்ற இளையோர் 72மணிநேரத்துக்கு மேலாக பட்டினியிருந்து குரல் எழுப்பி என்ன பலன்?கடைசியில் அவர்கள் அந்த புனிதமான அகிம்சை வழி போராட்டத்தை தொடர்ந்து நடத்தக்கூட அனுமதி மறுக்கப்பட்டதுதான் வேதனை தருகின்றது.மகாத்மாகாந்தி மேல் கொண்ட வெறுப்பும் கோபமும் இன்னும் வெள்ளைக்காரர்களுக்கு போகவில்லை என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது.

ஒரு நாட்டின் அனைத்து குடிமக்களையும் சமத்துவமாக சரிசமானமாக வேறுபாடின்றி பார்க்கவேண்டியது ஒரு நல்ல மாந்தை நேய அரசின் கடமையாகும்.மனிதநேயம் என்பதை வெறும் வாயினால் பேசினால் மட்டும் போதாது.மனச்சாட்சியோடு அதை செயல் வடிவத்திலும் காட்டவேண்டும்.
அவ்வாறு வேறுபாடு காட்டப்படும் இடத்து அதை தட்டிக்கேட்க வேண்டியது எமது உரிமை.ஆனால் இது நமது வேலையல்ல.தாயகத்தில் நாள்தோறும் 50,100 என நரபலி எடுக்கிறது சிறிலங்கா பேரினவாத இராணுவம்.இதற்கு துணைபோகிறது இந்திய ராணுவமும் சர்வதேச நாசகார படைகளும்.

புலம்பெயர் தமிழர்கள் நாங்கள் இப்போது ஒரு தீர்மானத்தை ஒருமனதாக எடுக்கவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம்.

விடுதலைப்புலிகள் இருக்கிறார்களா?தலைவர் பிரபாகரன் வன்னியை விட்டு ஓடிவிட்டாரா?விடுதலைப்புலிகளுக்குள் பிளவு ஏற்பட்டு வலிமை குன்றிவிடார்களா?காடுகளுக்குள் ஓடி ஒழிந்துவிடார்களா?இன்னும் சில நாட்களில் ஆயுதங்களை எல்லாம் போட்டுவிட்டு சரணடையபோகிறார்களா?இப்படியெல்லாம் பலகேள்விகளை கேட்டுக்கொண்டிக்கிறார்கள் பலபேர்.அவர்களுக்கெல்லாம் ஒரே பதில் தான்.புலி பசித்தாலும் புல்லை தின்னாது.

ஒரு மாதமாக 1500 அப்பாவி பொதுமக்களை நரபலி எடுத்து 5000 விடுதலைப்புலிகளை கொன்றொழித்துவிட்டதாக சர்வதேசத்துக்கு கணக்கு காட்டியிருக்கிறது மகிந்த அரசாங்கம்.அதை அப்படியே மண்டையை ஆட்டி ஏற்றுக்கொண்டிருக்கிறது சர்வதேசமும் மனித நேய அமைப்புக்களும்.கோடிக்கணக்கான புலம்பெயர் வாழ் தமிழர்கள் கொட்டும் வெய்யிலிலும் உறைபனியிலும் நின்று "எங்களுக்கு நீதி வேண்டும்,எங்கள் சொந்தங்களை மரணத்தில் இருந்து காப்பாற்றுங்கள்" என்று கதறிக்கூக்குரல் கொடுத்தும் சர்வதேசம் இறுக கண்மூடி தூங்குகின்றது.இல்லை தூங்குவதுபோல் நடிக்கிறது.

கடந்த ஒரு மாதத்தில் 2000 உயிர்கள் அநியாயமாக காவுகொள்ளப்பட்டுள்ளது.2500 இக்கும் அதிகமானவர்கள் உடல் ஊனமாக்கப்பட்டுள்ளார்கள். கோவில்கள்,தேவாலயங்கள்,வைத்தியசாலைகள் என அடைக்கலம் தேடி புகுந்த மக்களையும் சர்வதேச போர்விதிமுறைகளையும் மதிக்காது குண்டு வீசி கொன்றொழித்து கொண்டிருக்கிறது சிங்கள பேரினவாதம்.இதை கைகட்டி வாய்பொத்தி மெளனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.அதுமட்டுமா கொல்லப்படுவது புலிகள்தான் என்று அறிக்கையும் வேறு.வெள்ளைப்புறா வேசம் போட்ட குளிர் நாடும் அதற்கு ஆமாம் என்று தலையாட்டுவதுதான் கொடுமையிலும் கொடுமை.

வயிறுபிளந்து குடல் சிதறிக்கிடக்கும் சின்னக்குழந்தையும் தள்ளாத வயதில் தலை இல்லாமல் துண்டுதுண்டாய்க்கிடக்கும் அப்புவும் ஆச்சியும் விடுதலைப்புலிகளா?இல்லை இரண்டு கைகளையும் இழந்து வலியால் குழறும் சின்னப்பொடியன் புலியா?என்னடா உங்கள் நீதி?காசாவில் நாலு வயது குழந்தை இறந்து விட்டால் வாய் கிழிய கத்துகிறீர்கள்.நாய் ஒன்று நடுவீதியில் அடிபட்டால் நாலு பக்கத்துக்கு அனுதாப கட்டுரை எழுதும் சர்வதேச மனிதநேய வாதிகளே கொஞ்சம் மனச்சாட்சியோடு எங்கள் மக்களை திரும்பி பாருங்கள்.இல்லையென்றால் நீங்கள் எடுத்திருக்கும் சில இறுக்கமான தீர்மானங்களையும் மனச்சாட்சி இல்லாத முடிவுகளையும் போல நாங்களும் அவசரமாக எடுக்கவேண்டிய இக்கட்டான நிலைக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டிருக்கிறோம்.

தமிழர்கள் இழிச்சவாயர்கள்,குட்டக்குட்ட குனியும் மடையர்கள்.!,எது செய்யினும் ஏன் என்று கேட்பதற்கு நாதியற்றவர்கள்.!.தமிழன் உயிர் நாயிலும் கேவலமானது.!.மதிப்பில்லாதது.தமிழன் என்ற இனம் இனிமேல் இருக்கக்கூடாது.அவனுக்கென்று ஒரு நாடு வரலாற்றில் இருக்கவேகூடாது.இப்படியெல்லாம் நினைக்கும் சிங்களப்பேரினவாதத்துக்கும் சர்வதேச சண்டியர்களுக்கும் ஒன்றை மட்டும் கடைசியாய் கூறுகிறோம்.என்ன ஆயுதம் எடுக்கவேண்டும் என்று எதிரியே தீர்மானிக்கிறான் என்று யாரோ ஒருவன் சொன்னான்.முல்லைத்தீவிலும் புதுக்குடியிருப்பிலும் கொத்துக்குண்டுகளையும் கிளஸ்ரர் குண்டுகளையும் எரிகுண்டுகளையும் வீசியும் அப்பாவி பொதுமக்களின் உயிர்களை கொன்றொழித்தும் போராட்டத்தின் வடிவத்தையும் பாதையையும் மாற்றி விட்டான் எதிரி.வன்னியில் கேட்கின்ற அழுகுரல்களைப்போல் ஆயிரம் மடங்கு சிறிலங்காவின் மூலை முடுக்கேல்லாம் கேட்க வைப்பதற்கு தமிழர்களால் நினைத்தால் அரை நொடியில் முடியும்.இதைத்தான் சிங்களப்பேரினவாதமும் மகிந்த அரசும் மனிதநேய அமைப்புக்களும் சர்வதேசமும் எதிர்பார்க்குமானால் அது வெகுவிரைவில் நடக்கும்.அப்போதும் புலம் பெயர் தமிழர்களின் கைகளில் தான் இன்னொரு பணியும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.இப்போது சர்வதேசமே கண்திறந்து பார் என கூக்குரலிட்டு கதறும் நாங்கள்,சிங்கள தேசம் கூக்குரலிட்டு அழும்போது கொடுக்கு கட்டிகொண்டு ஓடிவரும் சர்வதேச சண்டியர்களை நடப்பதை பொத்திக்கொண்டு வேடிக்கை மட்டும் பார் என்று அடக்கிவைக்கவேண்டியதும் நாம்தான்.

என் அப்பு கட்டிய கோவணமே எனக்கு தேசியக்கொடி.!
உனக்கு வேண்டுமானால் பிரான்ஸ் கொடியோ அவுஸ்ரேலியக்கொடியோ தேசியக்கொடியாகலாம்
எனக்கு என் அப்பு கட்டிய கொவணத்துணியே தேசியக்கொடி
ஒடியல் புட்டும் மீன்கறியும் தான் எனக்கு எப்பொதும் தேசிய உணவு.

பிசாவும் மக்கசும் ருசிதான் -ஆனாலும்
அம்மாவின் கைப்பக்குவத்தில் ஆக்கிய நண்டுக்குழம்புக்கு கீழ்தான்

கொள்ளை அழகுதான் பாரிஸ் கோபுரம்-ஆனாலும்
நெடிதுயர்ந்த பனையை விட கொஞ்சம் குறைவுதான்.!

கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னமாகாது
கடல் கடந்தாலும் கலாச்சாரம் மாறாது

நாகரிகம் என்று உன் நல்ல பெயரை நறுக்கி மாற்றலாம்
உன்னுள் ஒடும் உன் தாயின் குருதியை மாற்றலாமோ?

ராப்பும்(துள்ளிசை) பப்பும்(கேளிக்கை விடுதி) உனக்கு அந்த மாதிரி
உடுக்கோசையும் காவடிஆட்டமும்தான் என்றும் எனக்கு முன்மாதிரி

அடையாளங்களை தொலைத்து விட்டு அசிங்கமாய் வாழ்வதைவிட
அம்மணமாக வாழ்வது மேல்.!

அன்புடன்
தமிழ்ப்பொடியன்
சபா ரமணா
09/02/2009

வியாழன், 5 பிப்ரவரி, 2009

பாரிஸ் - மக்கள் போராட்டம் 04.02.2009

பிரான்சின் பாரிஸ் நகரத்திலுள்ள எக்கோல் மிலித்தர் என்ற இடத்திற்கு முன்னால் உள்ள அமைதிச்சுவர் அமைந்துள்ள இடத்தில் 04.02.2009 அன்று நடைபெற்ற மக்கள் போராட்டம்.

















திங்கள், 2 பிப்ரவரி, 2009

கறுப்பு தினம்

சிறிலங்கா சுதந்திரம் பெற்ற அன்றைய தினத்திலிருந்து தமிழினம் சுதந்திரத்தை இழந்து நிற்கின்றது. 61 ஆவது சுதந்திர தினத்தை சிறிலங்கா கொண்டாடவிருக்கும் இந்த நாட்களில் ஈழத்தமிழர்கள் மரணப்போராட்டத்தில் நிற்கின்றனர். இரத்தக்கறைபடிந்த நாட்களாகவும் தூக்கமின்றிய இரவுகளாகவும் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. உலகத்தமிழினமே உறவுகளின் அழுகுரலோடு கடந்து செல்லும் இந்நாட்களை நாம் வெறுமனே எண்ணிக்கொண்டிருந்தால் எங்கள் உறவுகளின் சமாதிகளைக்கூட சிங்கள பேரினவாதம் விட்டுவைக்கப்போவதில்லை . நாம் காலம் தாமதிக்கும் ஒவ்வொரு கணங்களும் எம் உறவுகள் அங்கே துடித்துக்கொண்டிருக்கும் கணங்களாகவே கழிகின்றன. நாம் வாழும் ஒவ்வொரு நாடுகளிலும் பெப்ரவரி 4 ஆம்திகதியை கறுப்புதினமாக முன்னெடுத்து உலகின் கண்களில் உண்மையைக்கொஞ்சம் உறைக்கச்சொல்வோம்.

அன்றையதினத்தை மாபெரும் கறுப்புதினமாக முன்னெடுக்கும் முயற்சியில் பிரான்சிலுள்ள தமிழ்வர்த்தகர் சங்கமும் தனது பெரும் பங்களிப்பைச்செய்துள்ளது. அன்றையதினம் கடையடைப்பு தினமாக முன்னெடுப்பதாகவும் அறிவித்துள்ளனர். அத்தோடு பல்வேறு அரசியல் பிரமுகர்களும் கறுப்பு தினத்தில் பங்கெடுப்பதற்காய் முன்னாயத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு தமிழ் அமைப்புக்களும் இதற்கான தமது ஆதரவுகளைத்தெரிவித்தும் வருகின்றன.

ஒவ்வொருதமிழனையும் வரலாற்றுக்கடமை அழைக்கின்றது. எழுச்சிகொண்ட தமிழர்களே மரணப்போராட்டத்தில் நின்று எம்மினம் மீளும் வரை அத்தியாவசியத்தேவைகள் தவிர்ந்த அத்தனையும் விடுதலைக்கே என்று சத்திய சபதம் எடுத்துக்கொள்வோம். எதிர்வரும் இந்த 4 ஆம் திகதியன்று தமது அத்தனை கடமைகளையும் நிறுத்திவிட்டு உறவுகளின் உயிர்களை மீட்கும் போராட்டத்தில் இறங்குவதற்காய் தமிழர்கள் எழுச்சிகொண்டுள்ளனர்.

காசாவில் 22 நாட்களில் 1200 உயிர்கள் பலிகொள்ளப்பட்டபோது வன்மையாகக்கண்டனம் செய்த உலகின் கண்களுக்கு நாளாந்தம் எண்ணிலடங்காமல் தொடரும் படுகொலைகள் கண்களில்படவில்லை . உலகத்தமிழ்நெஞ்சங்களே நாம் ஒவ்வொரு தமழனும் எமக்காய் குரல் கொடுக்கின்றபோதுதான் எமது தேசத்தின் விடுதலை சாத்தியமாகும் . விண்மட்டும் புகழுற்று நின்ற தமிழன் விறைப்பற்று வீழ நாம் விட்டுவிடக்கூடாது.

எம் இனத்தை முழுமையாகத்துடைத்தழிப்பதற்காய் எத்தனையோ வஞ்சகங்களையெல்லாம் சிங்களம் தயங்காமல் செய்கின்றது. பாதுகாப்பு வலயம் என்று ஓர்பகுதியினை அறிவித்து அப்பகுதியில் கோரத்தனமாகத்தாக்கி பல்லாயிரக்கணக்கில் தமிழுயிர்களைக்குடித்தும் இரத்தவெறியடங்காத பேரினவாதிகள் சுதந்திரதினத்திற்குள் அத்தனை தமிழரையும் அழித்துவிடுவோம் என்று கங்கணம் கட்டி அலைகின்றது. படுகொலைகளையே தொழிலாகக்கொண்டு தொடரும் சிங்கள பேரினவாத ஆட்சியை பிரான்சைத்தலைமை மையமாகக்கொண்டியங்கும் ஊடகவியலாளர் அமைப்பினதும் சர்வதேச எல்லைகளற்ற அமைப்பினதும் பட்டினிக்கெதிரான அமைப்பினதும் அறிக்கைகளுக்குப்பின்பும் உயிர்ப்பாதுகாப்புவேண்டித்தஞ்சமாய் வந்த அப்பாவித்தமிழ்மக்களைத்திருப்பி அனுப்பும் செயற்பாடு சரிதானா என நீதிகேட்டும் அணியணியாய் நாம் அனைவரும் திரள்வோம்.

பயங்கரவாதத்திற்கெதிரான போர் எனக்கூறிக்கொண்டு பச்சிளம் பாலகர் மீதும் பல்குழல் எறிகணைத்தாக்குதல்களும் குழந்தைகள் முதல் வயோதிபர்கள்வரை தமிழர் என்ற ஒரே பார்வையை மட்டும் வைத்துக்கொண்டு அரக்கத்தனமாகவும் கண்மூடித்தனமாகவும் மேற்கொள்ளப்படும் விமானக்குண்டுவீச்சுக்களையும் உடன்நிறுத்தக்கோரி சர்வதேசமும் ஐரோப்பியத்தலைமையை ஏற்றிருக்கும் பிரெஞ்சுதேசமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரியும் வீடுகளைவிட்டு வீதிகளில் இறங்கிப்போராடுவோம் .

உலகத்தமிழ்நெஞ்சங்களே ஒவ்வொரு கணமும் உறவுகளின் உயிர்கள் பறிக்கப்படுகின்றது. துயரத்தின் உச்சியிலே நின்று வாழ்வா சாவா என்று வாழும் எம் மக்களின் கண்ணீர் துடைப்போம் . கைகொடுப்பார் யாருமில்லை உலகமே எம்மைக்கைவிட்டாலும் எமது தொப்புழ்கொடி உறவுகளான தமிழ்நாட்டின் தமிழுணர்வு கொண்ட மக்களும் நாமும் இருக்கின்றோம். என்பதை உணர்வுடன் உலகின் செவிகளில் ஓங்கி உரைத்திடுவோம். தமிழனின் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் எமது பலம் தான் உறவுகளின் உயிரின் இருப்பை நிர்ணயிக்கப்போகின்றது. எத்தனையோ இடர் மிகுந்த பொழுதுகளிலெல்லாம் எம்மை எமது போராட்டம் தான் காப்பாற்றி வந்திருக்கின்றது. ஆனால் இன்றோ மிகுந்த நெருக்கடியான ஓர் சூழ்நிலையில் இமயவரம்புகளில் நின்று எம்தேசம் போராடிக்கொண்டிருக்கின்றது.பாரெங்கும் வாழும் தமிழர்களே வரலாற்றுக்கடமை எம் ஒவ்வொருவரையும் அழைக்கின்றது. அன்பான உறவுகளே நாம் யாரும் இந்த வரலாற்றுக்கடமையிலிருந்து தவறி எமது இனத்தின் அழிவிற்குக்காரணமானவர்களாக வேண்டாம். உலகத்தமிழினமே இன்று நாம் தூங்கினால் என்றுமே எம்மினம் நிம்மதியாகத்தூங்கமுடியாது. உலகின் கண்களைத்திறந்து உறவுகளின் உயிர்களைக்காப்போம்.

பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களே

எழுந்து வாருங்கள் ! எழுச்சிகொள்வோம்! பேரெழுச்சிகொள்வோம் !

நாள் - 04-02-2009

நேரம் - 14.00

இடம் - Place de l`ecole militaire



ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

லண்டன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் - ஒரு நோக்கு

-ரி.சோதிலிங்கம்
ண்டன் புலம்பெயர் வாழ்வில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்களில் முன் மாதிரியாகவும் தமிழர்களை ஒன்று சேர்க்கும் பக்குவத்துடனும் BTF-TYO வினால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட ஊர்வலம் நடந்தேறியது. இந்த ஊர்வலத்தில் 50000 - 100000 பேர் வரை கலந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஊர்வலம் கடந்த காலங்களில் புலிகளை முதன்மைப்படுத்தி செய்ய்பபட்ட நிகழ்வுகள் போலல்லாது பொதுவான வாசக - கோசங்களுடன் நடைபெற்ற போதிலும் புலிகள் தரப்பினர் ஏற்படுத்தும் தவறுகளையோ மனித உரிமை மீறல்களையோ வெளிப்படுத்தி இருந்திருக்கவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து மக்களை வெளியேற்ற ஜ நா மற்றும் சர்வதேச அமைப்புக்களின் வேண்டுகொள்களை பிரதிபலித்தோ இருக்கவில்லை என்பதும் குறிப்பிட்டேயாக வேண்டும்.

கடந்த கால ஈழப் போராட்ட வரலாற்றில் ஏற்பட்ட பல அரசியற் தவறுகளை, சந்தர்ப்பம் கிடைக்கும் போது அவற்றை புலிகள் தமிழர்கள் பிரதேச சுயாட்ச்சியை ஏறப்படுத்தும் மைல்கற்களாக பயன்படுத்தாமல் போனது பற்றி பலரிடமும் விமர்சனங்கள் உள்ள போதிலும் நேரிடையாக இன்று வரை புலிசார்பு ஊடகங்கள் அதனை வெளிப்படுத்தவில்லை. இதை ஒரு சுய விமர்சனமாகக் கூட பார்க்கப்படவில்லை என்பது பலரின் ஆதங்கமாக உள்ளது.

இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் அரசுக்கெதிரான கோசங்களும் யுத்த நிறுத்தம் கோரிய கோசங்களும் இந்திய ஆதரவு கோசங்களும் முன்வைக்கப்பட்ட அதேவேளை புலிகளின் தவறுகள் எதுவும் சுட்டிக்காட்டப் படவில்லை.

கடந்த சில வாரங்களாக ஜரோப்பாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் எடுத்து வரப்பட்ட புலிக் கொடி, பிரபாகரனின் படம் போன்றவைகள் இம்முறை லண்டன் ஊர்வலத்தில் முன்வைக்கப்படாமல் இருந்தது மிகவும் வரவேற்க்கத்தக்கதே. இது எதிர்காலதில் சரியான வழிவகைகளை தேட உதவி செய்யும்.

லண்டன் ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்ட பல முக்கிய பதாகைகளில் யுத்தத்தை நிறுத்து; தமிழர்களை கொல்லாதே; பேச்சு வார்த்ததையை ஆரம்பி போன்ற கோசங்களுடன் இந்தியாவே தமிழர்கள் உனது நண்பன் என்ற பதாகை தாங்கப்பட்டதும் குறிப்பிட்டாக வேண்டும். இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இந்திய இராணுவத்துடன் ஏற்படுத்தப்பட்ட முறுகல் முற்றி சமாதானப் படை கொடூரப்படையாகியது. இன்று இலங்கைத் தமிழர்கள் இந்தியாவின் எதிரி அல்ல என்ற பதாகையுடன் நிற்கின்றனர்.

இதே போல BBC க்கு எமது போராட்டத்தில் அக்கறை செலுத்தும் படியான பதாகைகள் தாங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கதே. ஆர்பபாட்டங்களில் ஆளும் அரசகளுக்கு எதிராக பதாகைகள் வருவது வழமையே ஆனால் கடந்த வாரம் BTF-TYO வினர் பிபிசி அலுவலகத்திற்கு எதிரான ஓர் ஆர்ப்பாட்டத்தை செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொது ஊடகங்கள் தமிழர் போராட்டங்களை பாராமுகமாக இருப்பதற்கான காரணங்களை அறிந்து அவற்றின் ஊடாக அந்த ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதே சரியானது. அதைவிடத்து அந்த BBC க்கு எதிராக போர்க்கொடி ஏந்தி பலவந்தமாக பாடம் கற்பிக்கும் தன்மைக்கு எப்படியான பதில் கிடைக்கும் என இனிவரும் காலங்களில் அறிந்து கொள்ளலாம்.

BTF ன் முக்கிய உறுப்பினர் சுரேந்திரன் SKY ற்கு கருத்தப்பரிமாறிய போது தமிழர்களின் பிரதிநிதி புலிகள் என்றும் புலிகளுடன் அரசு யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தை செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார். இதன் மூலம் BTF தமிழர்களின் ஏகபோக பிரதிநிதி புலிகள் மட்டுமே என்ற கருத்தை வெளிப்படுத்துவதாகவே தெரிகிறது. கடந்த சில வருடங்களாக இலங்கையில் வட - கிழக்கு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை BTF சுரேந்திரன் புரிந்து கொள்ள தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது.

ஏதிர்பார்த்ததைவிட மிக அதிகமானோர் ஊர்வலத்திற்கு வந்திருந்ததாலும், லண்டன் பொலீசாரின் இக்கட்டான நிலைமைகளினாலும், ஊர்வலத்தில் பங்கு பற்றிய ஒரு பகுதியினர்க்கு சில அசௌகரியங்கள் ஏற்பட்டதும் அந்த குளிரிலும் அந்த அசௌகரியங்களை தமிழர்கள் பொறுமையாக ஒத்தழைத்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

ஊர்வலத்தின் இறுதியில் 5000 பேர் வரையிலானவர்கள் பாராளுமன்றதின் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் பாராளுமன்றத்தில் மகஜர் கையளித்தனர். கையளிக்கப்பட்ட மகஜருக்கு பதில் ஓரிரு தினங்களில் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரம் 4ம் திகதி இலஙகையின் சுதந்திர தின நாளை கரி நாளாக அறிவித்து போரட்டம் ஒன்றை BTF-TYO ஒழுங்கு செய்துள்ளனர்.


நன்றி - தேசம்நெற்

ஓர் வேண்டுகோள்!

மிழர் தாயகத்தில் நாளாந்தம் இடம் பெற்று வருகின்ற கோர யுத்தத்தினால் இறந்து மடிகின்ற எங்கள் இரத்த உறவுகளைப் பாதுகாப்பது தொடர்பான கருத்துக் கணிப்பினைக் கனடாவைச் சேர்ந்த இராணுவ ஊடகம் ஒன்று மேற்கொள்கின்றது. எங்கள் தாயக உறவுகளின், இரத்த உறவுகளின் உயிர்களினைப் பாதுகாக்க நீங்கள் விரும்பின் உடனடியாக விரைந்து செயற்படுங்கள்.

உலகங்கெங்கும் பரந்து வாழுகின்ற உறவுகளே! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்,
உடனடியாக 0014162604005 எனும் தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு எமது உறவுகளைப் பாதுகாக்க விரும்பின் அறிவுறுத்தல் (Option) ஒன்றினை ( 1) அழுத்தவும்.

காலம் தாமதிக்காமல் உடனே விரைந்து செயற்படவும். ஒரே குடும்பத்தில் எத்தனை பேர் வேண்டுமானலும் வாக்களிக்காலம்.
ஒருவர் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்.
இந்த விடயத்தை உடனடியக உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்!

நேற்று இடம்பெற்ற எறிகணை மற்றும் பல் குழல் உந்துகணைத் தாக்குதலில் (12) பன்னிரண்டு சிறுவர்கள் உட்பட (32) முப்பத்திரண்டு பேர் வன்னிப் பகுதியில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அழுத்துங்கள் உங்கள் தொலைபேசிகளை!
பதியுங்கள் உங்கள் வாக்குகளை!
திறவுங்கள் உலகின் விழிகளை!

Hi Every One! please vote for ceasefire in SriLanka. Please dial 0014162604005 and press one. This vote been canadian army media. Please act soon… And pass the message to every one you know. Please…Please vote now and safe our people. Evan last night 32 been killed including 12 kids on ariel bombing

லண்டனில் தமிழர்கள் மாபெரும் எழுச்சி

ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு

ண்டன் மில் பாங்க் (MILL BANK ) எனும் இடத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் தொடங்கிய இந்த மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நாடாளுமன்ற சுற்று வட்டம் ஊடாக ரெம்பிள் பிளேஸை (TEMPLE PLACE) நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

தமிழ் இன அழிப்பை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கத்தை கடுமையாகக் கண்டித்தும் அனைத்துலக சமூகத்தின் பாராமுகத்தைக் கண்டித்தும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

அத்துடன் சிறிலங்கா அரசுக்கு எதிராகவும் அனைத்துலக சமூகத்தின் பாராமுகத்தை கண்டிக்கும் வகையிலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதாகைகளை ஏந்திய வண்ணம் உள்ளனர்.













வெள்ளி, 30 ஜனவரி, 2009

பிரான்ஸ் - மக்கள் போராட்டம் - 28-01-2009

பிரான்சில் 28-01-2009 அன்று பாக்கிஸ்தான் தூதரகம் முன்பாக நடைபெற்ற மக்கள் போராட்ட ஒன்றுகூடல், சில புகைப்படங்கள்.

இது ஒரு ஆரம்பமே !